Monday, 9 September 2024

அரசு இ-சேவை மையங்களில் குவியும் மக்கள் கூட்டம்.. ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்

 


அரசு இ-சேவை மையங்களில் குவியும் மக்கள் கூட்டம்.. ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க வருகிற 14-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதார் மையங்களில் மக்கள் அலைகிறார்கள்.

முன்பு ஒரு நாளைக்கு 50-க்கும் மேலான ஆதார்  புதுப்பித்தலை  செய்து கொடுத்த ஊழியர்கள், தற்போது ஒரு நாளைக்கு 2 அல்லது 3-க்கு மேல் செய்து கொடுக்க முடியவில்லை என்கிறார்கள். சில நேரம் புதுப்பித்தல் செய்யும்போது தள்ளுபடி என்று வருகிறதாம். அவ்வாறு வரும்போது ஒரு தள்ளுபடி விண்ணப்பத்துக்கு ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 4 தள்ளுபடி ஆனாலே ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டியது ஏற்படும் என்பதாலும் மேலும்  மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த பல  தனியார் மையங்கள் ஆதார் சேவை செய்ய முடியாத  படி தற்காலிக முடக்கம் செய்யப்பட்டுள்ள  நிலையில்
இந்த பணியை செய்து கொடுக்க தனியார் இசேவை மைய அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்

இது ஒருபுறம் எனில், ஆதார் சர்வர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், முன்பு போல் வேகமாக ஆதார் கார்டு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.. 

 பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க தற்சமயம் சர்வர் சரியாக இயங்காததாலும்  மேற்கண்ட சில காரணங்களாலும் இந்த பணிகள் சரியாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையே நீடித்து பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

iPhone 16 Pro, iPhone 16 Pro Max விலை குறைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!-

 iPhone 16 Pro, iPhone 16 Pro Max விலை குறைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!- ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - இந்த ஆண்டின் எஞ்சிய ம...