Tuesday, 10 September 2024

E-Shram Card: இ ஷ்ரம் கார்டில் இத்தனை நன்மைகளா? இவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம்

 

 
E-Shram Card: இ ஷ்ரம் கார்டில் இத்தனை நன்மைகளா? இவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம் :

e-Shram Yojana: ஏழைகளின் நலனுக்காக இந்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில், ஏழைகளுக்கு அரசு நிதி உதவியும் வழங்குகிறது. பல திட்டங்களில் ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீடும் கிடைக்கிறது. இந்த வரிசையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக ஒரு திட்டமும் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசு இ-ஷ்ரம் யோஜனா திட்டத்தைத் தொடங்கியது.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் யார்? 

விவசாயத் தொழிலாளர்கள், பால் விவசாயி, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளி, மீனவர்கள், மரம் அறுக்கும் தொழிலாளர்கள், லேபிளிங் மற்றும் பேக்கிங் தச்சர், பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலாளி, உப்பு தொழிலாளி, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலையாட்கள், முடி திருத்துபவர், 
செய்தித்தாள் விற்பனையாளர்கள், ரிக்ஷா ஓட்டுனர், ஆட்டோ டிரைவர், பட்டு உற்பத்தி தொழிலாளி, வீட்டு வேலைக்காரர்கள், MGNREGA தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள்.

தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்  :

அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக இ-ஷ்ரம் போர்ட்டலையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. இ-ஷ்ரம் போர்ட்டலின் நோக்கம் அமைப்புசாரா தொழிலாளர்களின் தரவுத்தளத்தை சேகரிப்பதாகும். இதனால் அவர்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களின் பலன்களை துல்லியமாக வழங்க முடியும். அமைப்புசாரா துறையில் பணிபுரியும் ஒருவர் தொழிலாளர் அட்டை அல்லது இ-ஷ்ரம் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த அட்டையின் மூலம், தொழிலாளர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர்.

அரசின் திட்டங்களை அணுகலாம்

இ-லேபர் கார்டு மூலம், தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம், இறப்பு காப்பீடு, ஊனமுற்றால் நிதி உதவி போன்ற பல்வேறு சலுகைகளைப் பெறலாம். இ-ஷ்ரம் கார்டின் நோக்கம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் போர்டல் மூலம் அனைத்து புதிய அரசு திட்டங்கள் மற்றும் வசதிகளுக்கான அணுகலை வழங்குவதாகும்.

இ-ஷ்ரம் கார்டின் நன்மைகள்

1) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அமைச்சகங்கள் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

2) இ-லேபர் கார்டு வைத்திருக்கும் நபர், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் 2 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு உரிமையுடையவர். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள காப்பீட்டின் பலனையும் பெறுகிறார்கள்.

3) இ-லேபர் போர்டல் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் நபர்களின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை பராமரிக்கும்.

4) இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து சமூகப் பாதுகாப்புப் பலன்களும் இந்த இணையதளத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.

 

விண்ணப்பிக்க தொடர்பு கொள்ளவும் :

ஸ்ரீ கிருஷ்ணா கம்ப்யூட்டர் பொது இ-சேவை ஆதார் சேவை மையம் (மத்திய மாநில அரசு அனுமதி பெற்றது) (அனைத்து அரசு சேவைகளும் ஒரே இடத்தில்)
முகவரி : ராசிபுரம் மெயின் ரோடு, சப்பையாபுரம் பஸ் ஸ்டாப் எதிரில், நாமக்கல் - 637505.
Call- 9788777850 | Mail - THANGARAJACSC@GMAIL.COM | Web - skcnetzone.blogspot.com

 

 

Monday, 9 September 2024

அரசு இ-சேவை மையங்களில் குவியும் மக்கள் கூட்டம்.. ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்

 


அரசு இ-சேவை மையங்களில் குவியும் மக்கள் கூட்டம்.. ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க வருகிற 14-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதார் மையங்களில் மக்கள் அலைகிறார்கள்.

முன்பு ஒரு நாளைக்கு 50-க்கும் மேலான ஆதார்  புதுப்பித்தலை  செய்து கொடுத்த ஊழியர்கள், தற்போது ஒரு நாளைக்கு 2 அல்லது 3-க்கு மேல் செய்து கொடுக்க முடியவில்லை என்கிறார்கள். சில நேரம் புதுப்பித்தல் செய்யும்போது தள்ளுபடி என்று வருகிறதாம். அவ்வாறு வரும்போது ஒரு தள்ளுபடி விண்ணப்பத்துக்கு ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 4 தள்ளுபடி ஆனாலே ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டியது ஏற்படும் என்பதாலும் மேலும்  மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த பல  தனியார் மையங்கள் ஆதார் சேவை செய்ய முடியாத  படி தற்காலிக முடக்கம் செய்யப்பட்டுள்ள  நிலையில்
இந்த பணியை செய்து கொடுக்க தனியார் இசேவை மைய அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்

இது ஒருபுறம் எனில், ஆதார் சர்வர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், முன்பு போல் வேகமாக ஆதார் கார்டு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.. 

 பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க தற்சமயம் சர்வர் சரியாக இயங்காததாலும்  மேற்கண்ட சில காரணங்களாலும் இந்த பணிகள் சரியாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையே நீடித்து பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

Sunday, 8 September 2024

ஸ்ரீ கிருஷ்ணா கம்ப்யூட்டர் பொது இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையம்

🖥️🖨️🌐 ஸ்ரீ கிருஷ்ணா கம்ப்யூட்டர் பொது இ - சேவை மையத்திற்கு உங்களை வரவேற்கிறோம் 🙏 ( அரசு அனுமதி பெற்றது) அரசின் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்.

எங்கள் சேவைகளின் பட்டியல் :

1. ஆதார், பான் கார்டு, வோட்டர் ID, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சேவைகள்.
2. மின்சாரம், பேருந்து, ரயில், விமானம் டிக்கெட் முன்பதிவு
3.பைக், கார், ஹெல்த் இன்சூரன்ஸ், போக்குவரத்து அபராதம்
4.பயிர் காப்பீடு ( PMFBY ),சிறு தொழில் பதிவு சான்றிதழ்,சிபில் ரிப்போர்ட்,லோன்.
5.சாதி, இருப்பிடம், வருமானம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டா, சிட்டா, ஈசி
6.ஜெராக்ஸ், பிரிண்டவுட், ஸ்கேன்.
7. பட்டா மாறுதல் விண்ணப்பித்து தரப்படும்.
மற்றும் இதர சேவைகளும் தேவைக்கேற்ப சிறந்த முறையில் செய்து தரப்படும்.


தொடர்பு கொள்ளவும்:
முகவரி : ராசிபுரம் மெயின் ரோடு, சப்பையாபுரம் பஸ் ஸ்டாப் எதிரில், நாமக்கல் - 637505.
Call- 9788777850 | Mail - THANGARAJACSC@GMAIL.COM | Web - skcnetzone.blogspot.com
 

(USHA) சான்றிதழுடன் தையல் பயிற்சி முழு விவரம்

  நீங்கள் தையல் (Tailoring) திறன்களை ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்ள விரும்பினால், சில பயிற்சி செயலிகள் (Apps) மற்றும் பயிற்சி தளங்கள் மூலம் பய...